கர்ப்பிணிக்கு வைட்டமின் சி எதற்காக கொடுக்க வேண்டும்?

தங்கள் வயிற்றில் இருக்கும் சிசுவை பேணிக்காக்க விரும்பும் கர்ப்பிணிகள், வைட்டமின் சி சத்துக்களை போதிய அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக உணவிலேயே போதுமான அளவுக்கு வைட்டமின் சி பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் மருந்து மூலம் மட்டுமே பெறமுடியும் என்ற கட்டாயம் இல்லை.


        • ரத்த நாளங்களை வலுப்படுத்தும் தன்மையும், ரத்த அழுத்த அளவைக் குறைக்கும் தன்மையும் வைட்டமின் சி சத்துக்கு உண்டு.

        • எளிதில் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கவும், உடலுக்கு வெளியிலும் உள்ளேயும் ஏற்படும் காயங்கள் சீக்கிரம் ஆறுவதற்கும் வைட்டமின் சி       சத்து பயன்படுகிறது.

        • வைட்டமின் சி சத்து குறையும்போது ஈறுகள் வீக்கம் அடைந்து, ரத்தம் கசிவு ஏற்படுவதுடன் வாய் துர்நாற்றம் ஏற்படவும் செய்கிறது.

        • எடை குறைவான குழந்தைகள் பிறப்பதை தடுக்கவும் வைட்டமின் சி பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன

          வைட்டமின் சி சத்தானது பால், தயிர், தக்காளி, முள்ளங்கி, காரட், முட்டைகோஸ், கறிவேப்பிலை, புதினா, கீரைகள் மற்றும் முட்டையின் மஞ்சள்           கரு, வெண்ணெய் போன்றவற்றில் அதிகமாகவே இருக்கிறது. இவற்றை கர்ப்பிணிகள் போதிய அளவு எடுத்துக்கொள்வதே தாய்க்கும் சிசுவுக்கும்         நல்லது.