கஸ்தூரியை கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த அதிமுக பிரமுகர்கள்..! அதிர வைக்கும் வீடியோ உள்ளே!

விழுப்புரத்தில் அதிமுக கவுன்சிலர்கள் உயிருடன் எரிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி பேட்டியளித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.


விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தில் 16 வயதான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பயின்று வந்தார். இவருடைய தந்தைக்கும், சித்தப்பாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

முன்விரோதம் காரணமாக ஏற்கனவே, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சித்தப்பா முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை குறித்த வழக்கானது தற்போது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவ்வப்போது இரு பிரிவினரிடையே கடுமையான மோதல்கள் செயற்பட்டு வந்தன.

இதற்கிடையே நேற்றிரவு முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். அதோடு இல்லாமல் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உடலை பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்துள்ளனர்.

உடனடியாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அவருடைய குடும்பத்தினர் மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். 95% தீக்காயங்களுடன் அந்த இளம்பெண் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவமனை சார்பாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது திருவெண்ணைநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிக்கப்பட்ட சிறுமி கொடுத்த மரண வாக்குமூலத்தில் அப்பகுதி அதிமுகவை சேர்ந்த முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று நடிகை கஸ்தூரி தற்போது வெளியிட்டுள்ள பேட்டியானது சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

அதாவது, "அந்த குழந்தை மிகவும் அப்பாவியாக தோன்றுகிறது. எவ்வாறு இருவருக்கு இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட மனம் வந்தது. இந்த சம்பவம் அனைவரையும் உருக்குலைய வைத்துள்ளது. இவர்கள் இதுபோன்ற தவறுகள் செய்வதற்கு 3 காரணங்கள் முக்கியமாக கருதப்படுகின்றன.

முதலாவது காரணமாக நான் மதுவை கருதுகிறேன். மது அருந்தியதாக மனிதாபிமானம் மறைந்தது. ஒருவேளை மது அருந்தாவிட்டால் ஈவிரக்கம் தோன்றியிருக்கும். மதுவை முதலில் வழங்குவதே நம்முடைய அரசாங்கம் தான். 2 நாட்கள் திறந்து விட்டதால் ஒரு மாதத்திற்கு உரிய மதுவை வாங்கி பதுக்கி வைத்துவிட்டனர். 

இரண்டாவதாக, இது போன்ற மிருகங்களின் உண்மைத்தன்மையை அறியாமல் அவர்களை கட்சியில் சேர்த்துக் கொள்வதுதான். கட்சியில் பதவி கிடைத்தவுடன் அந்தப் பதவியை உபயோகித்து சமுதாயத்தில் அராஜகம் செய்துவருவதை தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதுவே இதுபோன்ற வட்டார அரசியல்வாதிகளை தவறு செய்ய தூண்டுகிறது.

மூன்றாவதாக, நம்முடைய சட்டங்களே. சட்டங்கள் கடுமையாக்கப்படும் வரை இதுப்போன்ற தவறுகள் தொடர்ந்து அரங்கேறி வரும். இது போன்ற மிருகங்களுக்கு தனியாக சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அவர்களின் மரபணுவை முழுவதுமாக அழித்து விட வேண்டும். மேலும் அவருடைய குடும்பத்தை அவர்களின் கைகளாலேயே அழித்துவிட வேண்டும்" என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

இந்த பேட்டியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.