திடீர் மூளை முடக்கம்..! சுயநினைவை இழந்தார்! மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பிரபல நடிகர்!

பிரபல குணசித்திர நடிகர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட் திரையுலகில் முன்னணி குணசித்திர நடிகர்களுள் முதன்மையானவர் தென்னவன். விருமாண்டி, சண்டக்கோழி, ஜெமினி ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராசாத்தி தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.

இதனிடையே திடீரென்று இவருக்கு மூளை முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த செய்தியானது கோலிவுட் திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.