தாத்தா என்ன பண்றீங்க? 12 வயது சிறுமி உடலின் அந்த இடத்தில் கை வைத்த 65 வயது கிழம்! நாகர்கோவில் அதிர்ச்சி!

8-ஆம் வகுப்பு மாணவியிடம் முதியவர் ஒருவர் நடக்க முயன்ற சம்பவமானது பறக்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகர்கோவில் அருகே பறக்கை எனும் இடம் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள செட்டி தெருவில் நீலகண்டன் 65 வயது முதியவர் வசித்து வந்துள்ளார். இவருடைய பக்கத்து வீட்டில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மாணவியின் வயது 12. 

நீலகண்டனின் வீட்டிற்கு சென்று வருவது மாணவி வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி சம்பவத்தன்று மாணவி நீலகண்டனின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அப்போது நீலகண்டன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து அந்த மாணவியிடம் நீலகண்டன் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி நீலகண்டனை தள்ளிவிட்டு தன் வீட்டிற்கு சென்றார். சென்று தன் பெற்றோரிடம் கதறி அழுதபடி நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார்.

உடனடியாக அவருடைய பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் நீலகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது நாகர்கோவில் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.