14 வயது மாணவி..! ஒரு மாதம்..! மாறி மாறி 5 ஆண்கள்..! நாகையில் நெஞ்சை உறைய வைக்கும் பாலியல் சம்பவம்!

புதுச்சேரியில் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருந்ததை கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த 14 வயது சிறுமி புதுச்சேரியில் விடுதியில் தங்கி பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியில் மாணவி திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் அவரை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர்.

பின்னர் மாணவியிடம் விசாரித்ததில் வேளாங்கண்ணியில் பெற்றோர் தற்காலிகமாக தங்கியிருக்கும் வீட்டிற்கு விடுமுறை நேரத்தில் சென்றிருந்த போது 5 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறினார். பின்னர் சிறுமி மூலம் கொடுத்த புகாரில் சூர்யா, ரூபன் காரல் மார்க்ஸ், கோகுல், வீரையன், தாஸ் ஆகியோரை போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிர் போலீசார், கைது செய்தனர். 

வடலூரை சேர்ந்த மாணவியின் பெற்றோர் வேளாங்கண்ணியில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றுகின்றனர். விடுமுறைக்கு சிறுமி சென்றபோது பெற்றோர் வேலைக்கு சென்றுவிடுவதால் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு ஆசைவார்த்தை கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் சூர்யாவின் நண்பர்களும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விவகாரம் பக்கத்து வீட்டில் இருக்கும் தாஸ் என்பவருக்கு தெரியவர அவரும் மகள் வயதில் இருக்கும் சிறுமியை சீரழித்துள்ளார். மாணவியை ஒரு மாதமாக 5 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்துள்ளது.