முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது, பதக்கம் ஆகியவை வழங்கி கெளரவித்தார்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறைசார்பில், ஆசிரியர் தின விழாவையொட்டி பள்ளிகளில் சிறப்பான முறையில் பணியாற்றி தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட 375 ஆசிரியர்களில், சென்னை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும்10,000 ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்கள்.


மாணாக்கர்களின் அறிவுக் கண்ணைதிறக்கும் ஆசிரியராகத் தன்னுடையவாழ்வைத் தொடங்கி, இந்தியநாட்டின் குடியரசுத் தலைவராகஉயர்ந்து, ஆசிரியர் சமுதாயத்திற்குபெரும் சிறப்பினை சேர்த்த தத்துவமேதை டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின்பிறந்ததினமானசெப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள்ஒவ்வொரு ஆண்டும்ஆசிரியர் தினமாககொண்டாடப்படுகிறது.இந்நாளில், சிறந்தகல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி தமிழ்நாடுஅரசுகௌரவித்துவருகிறது.

அந்தவகையில், இந்த ஆண்டு சிறந்தமுறையில்பணியாற்றிய ஆசிரியர்களைஊக்குவிக்கும் வகையில்தமிழ்நாடுஅரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ்செயல்படும் பல்வேறுபள்ளிகளில்பணிபுரியும் ஆசிரியர்கள்மற்றும் ஆசிரியர் பயிற்சிநிறுவனங்களில்பணிபுரியும் விரிவுரையாளர்களில் 375 ஆசிரியர்கள் நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் சென்னை மாவட்டத்தில்தெரிவுசெய்யப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு இன்று டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள், வெள்ளிப் பதக்கங்கள்மற்றும் 10,000 ரூபாய்பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கி முதல்வர் கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இன்றேகாலை 10.30 மணியளவில் பிறமாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட நல்லாசிரியர்கள் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள்வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். மேலும், 2020-ஆம் ஆண்டிற்கான தேசியநல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியை திருமதிஇரா.சி. சரஸ்வதிமற்றும் பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீதிலீப் ஆகியோர் மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர் அவர்களை இன்று சந்தித்து விருதிற்கான சான்றிதழ்க ள்மற்றும் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.