வாகனங்களில் ஸ்டிக்கருக்கு போலீஸ் எச்சரிக்கை… ஆளும் கட்சி கொடிக்கு என்ன நடவடிக்கை?

போலீஸ், லாயர் என்று ஸ்டிக்கர் இருந்தால் போக்குவரத்துப் போலீஸ் பஞ்சாயத்தில் இருந்து தப்பித்துவிடலாம் என்பதற்காகவே இதனை செய்கிறார்கள். இதுபோன்று பலரும் ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து புகார் வரும் நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.


வாகனங்களில் தங்கள் கெத்தைக் காட்டுவதற்காக விதவிதமாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு செல்கிறார்கள். குறிப்பாக போலீஸ், லாயர் என்று ஸ்டிக்கர் இருந்தால் போக்குவரத்துப் போலீஸ் பஞ்சாயத்தில் இருந்து தப்பித்துவிடலாம் என்பதற்காகவே இதனை செய்கிறார்கள்.

இதுபோன்று பலரும் ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து புகார் வரும் நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று வெளி யிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘சொந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள் வடிவில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்துவது, தனி நபர்களுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

பெரும்பாலும், சென்னையில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், டிஎன்இபி, ஜிசிசி, காவல்துறை, முப்படை போன்ற துறைகள் அல்லது நிறுவனங்களின் பெ இது போன்ற ஸ்டிக்கர்கள் வாகன எண் தகட்டிலும், வேறு பகுதியிலும் காணப்படும். இத்தகைய அரசாங்கத் தொடர்புடைய சின்னங்கள்/எழுத்துக்களை தனியார் வாகனங்களில் வெளிப்படுத்துவது அதன் இயக்கம் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்கிறது.

கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள் இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.

இது தவிர, பல தனியார் வாகனங்களில் ஒருசில அரசியல் கட்சியை சித்தரிக்கும் சின்னங்கள், மருத்துவர் அல்லது வழக்கறிஞர் என வெளிப் படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற எழுத்து, முத்திரை, சின்னம் போன்றவற்றை வாகனத்தில் இருந்து நீக்க மே 1-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது.

மேலும் இவ்விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது வருகின்ற 02.05.2024 முதல் மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் (மோட்டார் வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத குறியீடு) பிரிவு 198-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும். வாகன எண் தகட்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் மோட்டார் வாகன சட்ட விதி 177-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுசரி, ஆளும் கட்சி கொடி கட்டிக்கொண்டு செல்பவரை போலீஸ் தடுத்து நிறுத்துமா..?