ஈரோடு பஸ்நிலையம்! வெட்டவெளியை படுக்கையறையாக மாற்றிய இளம் ஜோடி! பலர் முன்னிலையில் அரங்கேறிய ச்சீய் ச்சீய் செயல்!

ஈரோடு மணி பஸ்நிலையத்தில் காதல் ஜோடிகள் இருவர் வெட்டவெளியில் செக்ஸில் ஈடுபட்ட சம்பவம் அந்த வழியே சென்ற பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.


ஈரோடு பிரதான பேருந்து நிலையத்தில் சமூகவிரோத செயல்களான பிக்பாக்கெட், திருட்டு மற்றும் இரவு நேரங்களில் வழிப்பறி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு புகார் அளித்தும் அவர்கள் கண்டும் காணாமல் இருப்பது தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. 

இவற்றிற்கு ஒரு படி மேலே சென்று மினிபஸ் பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் அட்டூழியங்கள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக ஆள்நடமாட்டம் குறைந்த அளவிலேயே இருப்பதால் காதல் ஜோடிகளுக்கு வாடிக்கையான இரவு இடமாக மாறியுள்ளது.

ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான பகுதிக்கு சென்று சில்மிஷங்களில் இந்த ஜோடிகள் ஈடுபடுவதை பொது மக்கள் தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்து செல்வதையும் காண முடிகிறது.

இதற்கிடையில் நேற்று இரவு 11 மணி அளவில் இளம் ஜோடி ஒன்று உச்சகட்ட போதையில் மினி பஸ் நிலையம் நோக்கி வந்துள்ளனர். முதலில் இருக்கையில் அமர்ந்து இல்லாத அட்டூழியங்களை செய்த இந்த ஜோடியை அங்கிருந்த பொதுமக்கள் எச்சரித்தனர். 

இதையடுத்து அங்கிருந்து மற்றொரு பகுதிக்கு சென்றுள்ளனர். இருவரும் போதையில் இருந்ததால் மற்றவர்கள் கூறுவது அவர்களுக்கு புரியவில்லை. பேருந்து நிலையத்தின் மேஜையில் படுத்துக்கொண்டு அங்கும் தங்களது அட்டூழியத்தை துவங்கினர்.

முதலில் பெண் வாலிபர் மெல் கைகளை போட்டு தவறாக நடக்க முயற்சித்தார். துவக்கத்தில் அதை தட்டிவிட்ட வாலிபர் பிறகு, பெண்ணை கட்டிப்பிடித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெட்டவெளியில் செக்ஸில் ஈடுபட்டு உள்ளனர். இரவு நேரம் என்பதால் இத்தகைய அசிங்கமான செயலை பொதுமக்கள் கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தனர் ஓரிருவர் மட்டுமே முன் வந்து இவர்களை அப்பகுதியிலிருந்து அடித்து விரட்டியுள்ளனர். 

மேலும் போலீசாரிடம் புகார் அளித்ததற்கு எவ்வித பதிலும் இல்லை. இத்தனை கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் ஈரோடு பேருந்து நிலையத்தில் இது போன்ற செயல்களை காவல்துறை கண்காணிப்பாளர்கள் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.