வாரம் ஒரு முறை பெண்ணும், வாரம் இரண்டு முறை ஆணும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை நம் முன்னோர்கள் வலியுறுத்தினார்கள். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் எண்ணெய் குளியல் முக்கியமானதாக கருதப்படுகிறது.
எண்ணெய் குளியல் போட்டால் உடல் நாற்றம் தீருமா?
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_2830_1_medium_thumb.jpg)
ஆனால் இன்றைய நவீன நாகரிகயுகத்தில் தீபாவளி அன்று மட்டுமே எண்ணெய் குளியல் நடைபெறுகிறது. தலைக்கு எண்ணெய் வைப்பதும் தேவையில்லை எனும் அளவுக்கு நாகரிகம் வளர்ந்திருக்கிறது.
· சீரகம் சேர்த்து காய்ச்சிய நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு, தூக்கமின்மை பிரச்னைகள் குறையும்.
· மன அழுத்தம், படபடப்பு, டென்ஷன் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் எண்ணெய் குளியல் போட்டால் பிரச்னை தீரும்.
· தோல் நோய் குறைந்து சரும ஆரோக்கியம் மேம்படுவதற்கும், உட்ல் பளபளப்படையவும் எண்ணெய் குளியல் பயன்படுகிறது.
· உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால் ரத்த ஓட்டம் சீரடைகிறது. மேலும் உடல் நாற்றம் போன்ற பிரச்னைகள் தீருகிறது.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது மட்டும் வெந்நீர் குளியல் நல்லது. மேலும் எண்ணெய் குளியல் அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது.