கணவனை கேரளா அனுப்பிவிட்டு தனிமையில் மனைவி செய்த செயல்! பிறகு அரங்கேறிய குரூரம்!

தமிழகத்தின் திருவாரூரைச் சேர்ந்தவர் செந்தில் குமார்(45). இவரது மனைவி அமராவதி(40), செந்தில் குமார் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார்.


இந்நிலையில் நேற்று முன்தினம் தனது சொந்த ஊருக்கு வந்த நிலையில் தனது மணைவியின் நடத்தைப் பார்த்து அவருக்கு சந்தேகம் வந்தது.இதையடுத்து செந்தில் குமாருக்கும் அமராவதிக்கும் நேற்று சண்டை நடந்தது.

அப்போது திடீரென ஆத்திரமடைந்த செந்தில் குமார் மணைவி அமராவதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு ஓடிவிட்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவி வெப்பம் தாங்க முடியாமல் கத்தி கதறினார்.

இதையடுத்து சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அமராவதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அமராவதி உயிரிழந்தார்.

அமராவதி இறந்த தகவல் அறிந்த செந்தில் குமார் போலீசாருக்கு பயந்து கொண்டு தனது வீட்டு பக்கத்தில் இருக்கும் வேப்ப மரத்தில் தனது மனைவியின் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொன்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.