காலேஜ் பாத்ரூமில் சின்ன பொன்னுங்களுடன்..! ஆசிரியரின் கேவலமான செயலை அம்பலப்படுத்திய மனைவி! சென்னை சம்பவம்!

சென்னையை சேர்ந்தவர் பிரியலட்சுமி 41. இவரது கணவன் ஏழுமலை.இவர் பச்சையப்பன் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை செய்து வருகிறார்.இவர் பி.எச்.டி வாங்கி உள்ளாராம்.


கடந்த 1998-ம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 19 வயதில் ஒரு பெண் உள்ளார்.இந்நிலையில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க மனுவுடன் பிரியலட்சுமி வந்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போது என் கணவர் மீது புகார் அளிக்க வந்துள்ளதாக கூறினார்.அவருக்கு பல பெண்களிடம் தொடர்பு உள்ளது.என்னை ஒரு வருடத்திற்கு முன்பே விவகாரத்திற்கு வற்புறுத்தினார்.

இவர் டுடோரியல் காலேஜில் படிக்க வரும் சின்ன சின்ன பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்.ஆம்பள பசங்களையும்,வாத்தியாரையும்  விட்டு அந்த பெண்களிடம் சீன்ட விடுவது,பிறகு இவர் பஞ்சாயத்து செய்வது போல் அந்த பெண்களை பாத்ரூமுக்கு கூட்டிட்டுப்போய் நாசம் செய்வது , இப்படி தவறான விஷயங்களை செய்து வருகிறார்.

அதுபோக படிக்க வரும் ஆண் பிள்ளைகளை பெண் பிள்ளைகளுடன் இரவில் அங்கேயே தங்க வைப்பது என்று பல வேலைகளை செய்து வருகிறார். மேலும் அந்த பெண் பிள்ளைகளை தவறான முறையில் போட்டோ, வீடியோ எடுத்து வைத்து மிரட்டுகிறார்.

இதுக்கு முன்னாடியே டுடோரியலில் படிக்க வந்த ஒரு பெண்ணின் அபார்சன் பேப்பர் இருந்தது. அதை பார்த்து நான் ஏற்கனவே கேட்டேன். உனக்கு அதை பற்றி எதுவும் தெரியாது என்று என்னை அடக்கி விட்டார். என் பொன்னு படிக்கனும்னு சொல்லி எங்களை திருப்பதியில் வாடகைக்கு வீடு எடுத்து 8 வருஷத்துக்கு முன்னாடியே எங்களை அங்கு அனுப்பிவிட்டார்.

இங்கே நந்தினி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு என் சொத்தை அனுபவிச்சுட்டு இருக்கார். அவருடைய வற்புறுத்தலால் விவகாரத்து வழக்கு பதிவு செய்தோம்.ஆனால் அது தள்ளுபடி ஆனது.எனக்கும் என் பொண்ணுக்கும் ஏதாவது பிரச்சனை வந்தால் அவர் தான் காரணம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.