பிறந்த குழந்தைக்கு ஏன் கண் பொங்குகிறது தெரியுமா?

பிறந்த குழந்தைக்கு திடீரென கண் பொங்குவதுண்டு. இது உடல் சூட்டினால் வருகிறது என்று நினைத்து கை வைத்தியம் செய்வது தேவையற்ற சிக்கலை உருவாக்கிவிடலாம்.


கண் பொங்கியதும் தாய்ப்பாலை கண்ணில் பீய்ச்சினால் நின்றுவிடும் என்று பெரியோர்கள் சொல்வதுண்டு. இதனால் எந்த பிரயோஜனமும் இருக்காது.கண்ணிற்கும் மூக்கிற்கும் இடையிலான இணைப்பு சரிவர வளர்ச்சி அடையாமல் இருப்பதால் இந்த பிரச்னை தோன்றுகிறது.

ஒருசில குழந்தைகளுக்கு கண்ணை திறக்கமுடியாத அளவுக்கு அதிகமாக பொங்குவது உண்டு.கண் பொங்குவது மட்டுமின்றி கண்களில் நீர் வடிவதும் இதே பிரச்னையால்தான் ஏற்படுகிறது.

ஒரு நாளில் இந்த பிரச்னை தீராமல் தொடர்கிறது என்றால் மருத்துவரை சந்தித்து, கண் மருந்து வாங்கி போடுவதுதான் சரியான தீர்வாக இருக்கும். தாய்ப்பால் விடுவது அல்லது கண்ணில் எண்ணெய் விடுவது தேவையற்ற பின்விளைவுகள் உண்டாக்கலாம்.