வல்லாரை கீரை ஞாபகத்திற்கு மட்டுமில்லை! மனதில் நிம்மதியும் பெற்றுத்தரும் என்பது உண்மையா??

சரஸ்வதி கீரை என்று கிராமப்புறத்தில் சொல்லப்படும் வல்லாரை கீரையை வல்லமைமிக்க கீரை என்று சொல்லலாம். இந்தக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிரம்பியுள்ளன.


மூளை வளர்ச்சியைத் தூண்டி ஞாபகசக்தி பெருகவும், குழந்தைக்கு நன்றாக படிப்பு வருவதற்கு உதவியும் செய்வதால்தான், வல்லாரை கீரையை சரஸ்வதி கீரை என்று அழைக்கிறார்கள்.

·         காய்ச்சல், அதிக உழைப்பினால் உடல் சோர்வாக இருப்பவர்களுக்கு உற்சாகம் தரவும், உடல் தேறவும் உதவுகிறது வல்லாரை.

·         வல்லாரை இலையை காயவைத்து பொடியாக்கி பால் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

·         வல்லாரையில் உள்ள ஏஸியாடிக்கோசைடு, சருமத்தில் ஏற்படும் புண்களை குணப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

·         தினமும் சில வல்லாரை இலைகளை மென்று தின்றுவந்தால் மனதில் அமைதியும், நிம்மதியும் நிலவும்.

ரத்தக் குழாய்களை சீர்செய்யும் தன்மையும் வல்லாரை கீரையில் இருப்பதால் வாரம் ஒரு முறையேனும் கண்டிப்பாக இதனை சேர்த்துக்கொள்வது குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது.