என் கவுன்சிலர் பொண்டாட்டிய தூக்கிட்டாங்க..! பூட்டிய வீட்டுக்குள் மைக் செட் போட்டு கதறும் காங்., பிரமுகர்! காரைக்குடி பரபரப்பு!

அரசியலில் இது எல்லாம் சாதாரணப்பா குதிரை பேரத்துக்கான மனைவியை மைக் செட் வைத்து குறுபோட்டு கதறிய கணவன்


சிவகங்கையில் ஒன்றிய கவுன்சிலராக நின்று வெற்றி பெற்ற பெண் உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்க, அவரது கணவர் குதிரை பேரத்திற்காக வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மைக் செட் வைத்து என் மனைவியை காணவில்லை அவரை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக கதறிக்கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த நிலையில், அதில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் திங்கட்கிழமை அந்தந்த மாவட்டங்களில் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், ஒன்றிய சேர்மன், மாவட்ட சேர்மன் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பதவிகளைக் கைப்பற்றுவதற்காக மாற்றுக் கட்சி கவுன்சிலர்களை அழைத்துச் செல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. 

இதற்கிடையில், காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக கங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தேவி மீனாள் வெற்றி பெற்றார். இந்நிலையில், அவரது கணவர் தேவி மீனாளை எதிர்கட்சியினர் கடத்திச் சென்றுவிட்டதாகவும் தனது மனைவியை மீட்டுத் தர வேண்டும் என்றும் கூறி ஓய்வுபெற்ற வட்டாட்சியருமான மகேந்திரன் கூறி வருகிறார்.   

குதிரை பேரத்திற்கா மனைவியை காணவில்லை என காவல் நிலையம் சென்று புகாரளிக்காமல், தனது வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு ஒலிப்பெருக்கி வழியே அவர் தனது மனைவியை மீட்டுத் தருமாறு கூறி வருகிறார். இதற்கிடையில்,தேவி மீனாள் உறவினர் வீட்டில் தாம் பாதுகாப்பாக இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

 இதனை அறிந்த காவல்துறையினர், குதிரை பேரத்துக்கான மகேந்திரன் , அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த செய்தி அப்பகுதி மக்களிடம் மிகவும் பரப்பை ஏற்படுத்து உள்ளது.