பெரியார் ஒரு தெருப் பொறுக்கி நாய்! ஐயப்ப பக்தி பாடகர் வீரமணி ராஜுவுக்கு எதிராக செருப்படி போராட்டம் அறிவிப்பு!

பெரியார் தெருப்பொறுக்கி நாய் – மோடிதான் கிருஷ்ணன் - ஐயப்ப பக்தி பாடகர் வீரமணி ராஜுவுக்கு எதிராக செருப்படி போராட்டம்


பெண்களை ஈவ் டீசிங் செய்த காரணத்துக்காக ஆண்களை கைது செய்ய வேண்டும் என்றால், அதற்கு முதலில் கைது செய்யவேண்டியது கிருஷ்ணர்தான் என்று தி.க.வீரமணி வெளியிட்ட செய்தி, ஆன்மிக அன்பர்களின் மக்களை வெகுவாகப் புண்படுத்தி இருக்கிறது.

இதைக் கேட்டு கொந்தளித்திருக்கும் ஐயப்ப பக்தி பாடகர் வீரமணி ராஜு, பெரியாரை தெருப்பொறுக்கி நாய் என்றும் ஒழுக்கம் கெட்ட நாய் என்றும் மிகவும் கேவலமாகத் திட்டியிருக்கிறார். அதுமட்டுமின்றி, இன்று தர்மத்தைக் காப்பாற்றும் அவதாரமாக வந்திருக்கும் மோடிதான் கிருஷ்ணர் என்றும் சொல்லியிருக்கிறார்.

தான் வளர்த்த மகளையே கட்டிக்கொண்ட ஒழுக்கம்கெட்ட நாய் பெரியாரின் சீடர் வீரமணி எந்தக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறாரோ, அந்தக் கூட்டணியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஆவேசக் குரல் எழுப்பியிருக்கிறார்.

ஓட்டுப் போட நினைக்கும்போது கிருஷ்ணரையும் ராமரையும் மனதில் நிறுத்தி மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று வீராவேசமாகப் பேசியிருக்கும் வீரமணிக்கு இப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை எங்கே பார்த்தாலும் செருப்பால் அடிக்கும் போராட்டம் நடத்துவதற்கு தி.க. முன்வந்திருக்கிறதாம். உஷார் ராஜி.