வாரம் 2 முறை மகளுடன் பாலியல் வல்லுறவு! மனைவி மரணத்திற்கு பிறகு விபரீத தந்தையின் தகாத செயல்!

மனைவி இறந்த பின் மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.


குர்கான் நகரில் தாய் இல்லாமல் தந்தையுடன் வசித்து வந்த மகளின் நடத்தை கடந்த சில நாட்களாக இயல்பாக இல்லாததையடுத்து அக்கம்பக்கத்தினர் அது குறித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது தந்தை தினமும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல் துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணையில் அந்த நபர் தனது மனைவி இறந்த பின் தனது  மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.

விசாரணை மேற்கொண்ட போது தனது தந்தை கடந்த 2 மாதங்களாக தினமும் இரவில் மது அருந்திவிட்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் மகள் தெரிவித்தார். கடந்த வாரத்தில் 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து சிறுமியின் தந்தையை கைது செய்துள்ள  போலீசார் சிறுமியை மீட்டு குழந்தைகள் நல மையத்தில் சேர்த்து கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.