தெருத் தெருவாக சென்று ஆரஞ்ச் பழம் விற்கும் வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது..! நெகிழ வைக்கும் காரணம்!

ஆரஞ்சு பழ விலை என்ன? என்று தன்னிடம் கேட்ட ஒரு ஆங்கிலேயருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய ஹஜப்பா, என் போன்று ஏழை குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இந்த நிலை ஏற்படக்கூடாது என்று எண்ணி 1999-ம் ஆண்டு தனது கிராமத்தில் உள்ள மசூதி ஒன்றில் பள்ளி ஒன்றை தொடங்கினார்.


அந்த பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாக மாறியுள்ளது. அதற்காக மத்திய அரசு இவரை கவரவிக்கும் வகையில் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. 

கர்நாடக மாநிலம், மங்களூருவின் புறநகரில் அமைந்துள்ள ஹரேகலாதான் ஹஜப்பாவின் சொந்த ஊர். அப்பகுதியிலுள்ள சந்தை ஒன்றில் ஆரஞ்சுப் பழங்களை விற்பனை செய்துவரும் இவருக்கு கடந்த சனிக்கிழமை அன்று வழக்கம் போல் தனது அன்றாட வேலைகளை செய்து கொண்டு இருந்தார். அதில் ரேஷன் கடையில் 35 கிலோ அரிசி வாங்குவதற்காக காத்திருந்தபோது அவருக்கு வந்த போன் அழைப்புதான் இவரை உலகறியச் செய்தது என்று சொன்னால் மிகையாகாது.

ஆனால், ஹஜப்பாவுக்கு, போனில் பேசியவர்கள் இந்தியில் பேசியதால் ஒன்றுமே புரியவில்லை. பின்னர் அருகில் இருந்த ஆட்டோக்காரரிடம் போனைக் கொடுத்துள்ளார். அந்த நபரிடம் அவரும் போனில் பேசினார். அவருக்கும் பெரிதாக எதுவும் புரியவில்லை எனினும், ஹஜப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பதாக மட்டும் கூறினார். இதற்கிடையில் இந்த உண்மையை, மாலை பத்திரிகையாளர் ஒருவர் வந்து தன்னிடம் சொல்லும்வரை ஹஜப்பா நம்பவே இல்லை. `செயின்ட் ஆஃப் ஆல்ஃபாபெட்ஸ்' என்றும் அப்பகுதியில் பரவலாக அறியப்படும் ஹஜப்பா பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளது பலருக்கும் வியப்பினையூட்டியுள்ளது.

இவருக்கு இந்த விருதினை தருவதற்கு முக்கிய காரணம் ஹஜப்பாவின் ஆரஞ்சு பழம்தான். இவரது கடந்த காலத்தில் இவர் ஆரஞ்சு பழம் வியாபரம் செய்து கொண்டு இருக்கும் வேளையில், ஒரு ஆங்கிலேயர் இவரிடம் வந்து ஆரஞ்சு பழ விலை என்ன? என்று தன்னிடம் கேட்ட அவருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய ஹஜப்பா, எதிர்கால குழந்தைகளும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிடக் கூடாது என்று எண்ணிய ஹஜப்பா 1999-ம் ஆண்டு தம் கிராமத்தில் உள்ள மசூதி ஒன்றில் பள்ளி ஒன்றை தொடங்கினார்.  

அதன் பின்னர் நண்பர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் அரசு உதவிபெறும் பள்ளியாகவும், அரசுப் பள்ளியாகவும் மாற்றினார். முதலில் 28 குழந்தைகளுடன் தொடங்கிய இந்த பள்ளி தற்போது உயர்நிலைப்பள்ளியாக பல மாணவர்களுக்கு பயன் தருகிறது. இதுபற்றி பேசிய ஹஜப்பா, கடந்த 2014-ம் ஆண்டு, காவல்துறை துணை ஆணையர் ஏ.பி.இப்ராஹிம்தான் மத்திய அரசிடம் தனது பெயரை விருதுக்குப் பரிந்துரைத்தார். இதனை மறந்துவிட்ட ஹஜப்பா தற்போது தனக்கு விருது கிடைத்திருப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் எல்லாம் கடவுள் அளிப்பவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

60 வயதான ஹஜப்பா, இன்றும் ஆரஞ்சு பழங்களை விற்றுக்கொண்டு பள்ளி வளாகத்தைச் சுத்தப்படுத்துவது, மாணவர்கள் குடிக்க தண்ணீர் ஏற்பாடுசெய்வது, கல்வி வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து அதிகாரிகளிடம் பள்ளியின் வளர்ச்சிக்காக பேசுவது என்று தன் வாழ்வையே குழந்தைகளுக்காக அர்ப்பணித்துள்ளதாக அம்மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், ஹஜப்பாவுக்கு கர்நாடகா அரசின் ராஜ்யோத்சவா விருதையும் 2013-ம் ஆண்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.