டோக்கியோ ஒலிம்பிக்கை மிரட்டும் கொரோனா வைரஸ்..! நடத்துவதற்கு நோ சான்ஸ்..?

கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது சாத்தியம் இல்லை என ஒலிம்பிக் அமைப்பின் அதிகாரி பத்திரிகையாளர்களுக்கு தகவல் அளித்து உள்ளார்.


கன்னட நாட்டின் முன்னாள் நீச்சல் சாம்பியனும் இப்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினருமான டிக் பவுண்ட் டோக்யோ ஒலிம்பிக் போட்டிகள் நடப்பது கேள்விக்குறிதான் என்பதுபோல் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 

"டோக்கியோவில் நிலைமை கட்டுக்குள் உள்ளதா? டோக்கியோ செல்வதற்கு சாத்தியமான சூழல் உள்ளதா? என நிருபர் ஒருவர் டிக்கிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு டிக் கூறுகையில் டோக்யோ 2020 என்பதை மையமாக வைத்து பல்வேறு விஷயங்கள் உள்ளது உணவு, பாதுகாப்பு, ஒலிம்பிக் கிராமம், ஹோட்டல்கள், ஊடகங்களுக்கான இடங்கள் என இது பெரிய வியாபாரம் விரைவில் நிலைமை சீராகும் அனைவரும் டோக்கியோவில் இருப்போம் என நம்புவோம்" என்றார்.

மேலும் "சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி யாரையும் இக்கட்டான சூழலில் நிறுத்தி விடாது. அனைத்து வீரர்களும் போட்டிகளை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு பயிற்சிகளை முறையாக மேற்கொள்ளுங்கள்" என கூறியிருக்கிறார்.

ஜப்பானில் இதுவரை 20க்கும் குறைவான வர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் 4பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்ததாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

கொரோனா எளிதாக பரவக்கூடிய நோய் என்பதால் பாதிப்பு உள்ள நாட்டில் போட்டிகள் நடத்துவது சாத்தியமற்ற விஷயம் என்பது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 2020 ஆண்டிற்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கால தாமதமாகும் அல்லது வேறு நாட்டில் நடத்தப்படலாம் என்று கமிட்டிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் சீன நாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படாது என செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.