நாசிக்: ஜாதிப் பாகுபாடு காரணமாக இளைஞர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வைத்த கும்பல் கைது செய்யப்பட்டது.
ரெண்டு பேரும் ஓரல் செ*ஸ் பண்ணுங்கடா..! ஆண் நண்பர்கள் இரண்டு பேரை பிடித்து இயற்கைக்கு மாறான உறவு! பிரபல ரவுடியின் ரவுசு!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_17729_1_medium_thumb.jpg)
நாசிக்கை அடுத்த புறநகர்ப்பகுதியை சேர்ந்தவர் சண்டேஷ் கஸ்டே. இவர் தனது பிறந்த நாளை ஒட்டி, கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார். இதில், அதே பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரை டிஜே வேலை செய்யும்படி ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதன்படி, குறிப்பிட்ட இளைஞர் தனது நண்பனுடன் வந்து, பிறந்த நாள் விருந்தில் உற்சாகமான பாடல்களை இசைத்துள்ளார். ஆனால், மது போதை தலைக்கேறிய சண்டேஷ், டிஜேவையும், அவரது நண்பனையும், ஜாதியை காரணம் காட்டி வம்பிழுத்துள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், டிஜேவையும், அவரது நண்பனையும் சிறைப்பிடித்த சண்டேஷ் ஆதரவாளர்கள், அவர்களை கட்டையால் அடித்து உதைத்துள்ளனர். அத்துடன், கரண்ட் ஷாக் கொடுத்தும் சித்ரவதை செய்துள்ளனர். இதைவிட உச்சமாக, அவ்விரு இளைஞர்களையும் நிர்வாணப்படுத்தி, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வைத்து, அதனை பார்த்து ரசித்துள்ளனர்.
இதன்போது, இரு இளைஞர்களின் ஜாதிப் பெயரை சொல்லி, ஆபாசமாக ஏசியும் உள்ளனர். பிறகு, அங்கிருந்து தப்பித்து வந்த இளைஞர்கள் இதுபற்றி நாசிக் புறநகர்ப்பகுதி போலீசில் புகார் செய்தனர். இதையேற்று, வழக்குப் பதிந்த போலீசார் அவர்களை துன்புறுத்திய 8 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சண்டேஷ் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.