மும்பை: ஓடும் பேருந்தில் தனது ஜிப்பை கழட்டி, பெண்ணை சீண்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
ஓடும் பேருந்தில் ஜிப்பை கழட்டி இளைஞன் செய்த மோசமான செயல்! நேரில் பாரத்து அதிர்ந்த இளம்பெண்!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_12419_1_medium_thumb.jpg)
மும்பை மாநகரில் BEST பேருந்து சேவை வழங்கப்படுகிறது. இதில், கடந்த வெள்ளிக்கிழமையன்று செம்பூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திர பாட்டீல் என்ற ந்பர் பயணித்துள்ளார். பேருந்தில் அதிக கும்பல் இருந்த நிலையில், ராஜேந்திர பாட்டீல் தன் முன்னே இருந்த பெண் மீது அடிக்கடி இடித்துள்ளார்.
அந்த பெண், கூட்டம் அதிகமாக இருந்ததால் வேறு வழியின்றி சமாளித்துள்ளார். ஆனால், கூட்டம் படிப்படியாக குறைந்தபோதும், பாட்டீல் தனது பின் பகுதியை தடவியபடியே நிற்பதை அப்பெண் உணர்ந்திருக்கிறார். அது மட்டுமல்ல, பாட்டீல் ஜிப்பை திறந்து, தனது ஆண் உறுப்பை வெளியே எடுத்து, அந்த பெண்ணின் பின்னால் உரசியபடி நின்றிருக்கிறார்.
பஸ்சில் கூட்டம் குறைந்த பிறகு, தனது பின்பக்கம் என்னதான் நடக்கிறது என திரும்பி பார்த்த அப்பெண், இந்த அலங்கோல காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, பாட்டீல் கன்னத்தில் ஓங்கி அவர் அறைந்து, சக பயணிகள் உதவியுடன் போலீசில் ஒப்படைத்துள்ளார்.
சக பயணிகள் ஒன்று சேர்ந்து கவனித்தபோது, பதட்டத்துடன் ஜிப்பை மீண்டும் போட்டுள்ளார் பாட்டீல். இந்த ஒரு காட்சியையே ஆதாரமாக வைத்து, பஸ் நடத்துனர் உள்பட அனைவரும் புகார் தர, போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.