செங்கோட்டையனிடம் மோதும் கொங்கு ஈஸ்வரன்! மாவட்ட மல்லுக்கட்டு!

வேலூர் மாவட்டத்தைப் பிரித்தது போன்று கோவை, ஈரோடு மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் கொங்கு ஈஸ்வரன்.


உடனே ஈஸ்வரன் முதலில் அங்கு 100 ஏக்கர் நிலம் தரட்டும் என்று தெரிவித்தார்.  இந்த விவகாரத்தை வில்லங்கமாக எடுத்துக்கொண்டு, செங்கோட்டையனிடம் மோதியிருக்கிறார் கொங்கு ஈஸ்வரன். இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை இது.

‘‘கோ£பிச்செட்டிப்பாளையத்தில் ஈஸ்வரன் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கி தந்தால் ஈரோடு மாவட்டத்தை பிரித்து கோபியை தனி மாவட்டமாக்குவதற்கு நான் கோரிக்கை வைக்கிறேன் என்று அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டியளித்திருக்கிறார்.

இதிலிருந்து கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களை பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கையே அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வைக்காமல் இருப்பது தெரிய வருகிறது. கோவை, ஈரோடு, சேலம் போன்ற பெரிய மாவட்டங்களை பிரிப்பதன் மூலமாக வளர்ச்சித்திட்டங்களை வேகப்படுத்த முடியும்.

அந்தந்த மாவட்டத்தில் மூடப்பட்டு கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளை காப்பாற்றி வேலை இழப்புகளையும் தவிர்க்க முடியும். கோபியை தனி மாவட்டமாக பிரித்தால் கோபியை சுற்றி இருக்கின்ற மக்கள் வளர்ச்சி பெறலாம் என்ற ஆர்வத்தோடு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். அந்த பகுதி மக்களுடைய கோரிக்கையை தான் நான் தமிழக அரசுக்கு தெரிவித்தேன். 

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை பிரித்து கொண்டிருக்கிறார்களே அங்கெல்லாம் 100 ஏக்கர் நிலம் பெற்றுக்கொண்டு தான் பிரித்தார்களா?. இப்போது வேலூரை மூன்றாக பிரித்தார்களே அங்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 100 ஏக்கர் கொடுத்த மூன்று தர்ம பிரபுகள் யாரென்று அமைச்சர் சொல்ல முடியுமா?.

ஒரு மாவட்டம் பிரிப்பதற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கும் 100 ஏக்கர் நிலம் எதற்கு என்று எனக்கு புரியவில்லை. அதற்கான விளக்கத்தை அமைச்சரிடம் எதிர்பார்க்கிறேன் என்று கேட்டிருக்கிறார்

என்ன சொல்லப்போகிறார் செங்கோட்டையன்!