SRM பல்கலைக்கழக 10வது மாடியில் இருந்து குதித்த மாணவி! பிறகு நேர்ந்த கொடூரம்!

காஞ்சிபுரம் மாவட்டம் அருகே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவி 10 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செங்கல்பட்டு அருகே எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவி அணுப்பிரியா. இவர் அங்குள்ள கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயோ மெடிக்கல் பயின்று வந்துள்ளார், இவர்  திருவள்ளூர் மாவட்டம் பென்னேரியை சேர்ந்தவர் .

கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி, திடீரென விடுதிக் கட்டிடத்தின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மாணவியின் உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பபட்டுள்ளது.

மேலும்  இது குறித்து மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் காதல் விவகாரமா ? அல்லது குடும்ப பிரச்சனையா என்ற கோணத்திலும் இதில் வேறு யாருக்காவது சம்மந்தம் உள்ளதா என்ற கோணத்தில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10வது மாடியில் இருந்து மாணவி விழுந்ததை பார்த்து அங்கிருந்த சிலர் மயக்கம் போட்டுள்ளனர். சிலர் தற்போது வரை அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.