பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையா? அதிர்ச்சி வேண்டாமே!

புதிதாக பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருக்கிறது என்று மருத்துவர் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடையத் தேவையில்லை. ஏனென்றால் பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் சில நாட்களுக்கு மஞ்சள் காமாலை இருப்பது இயல்புதான்.


சிவப்பணுக்கள் சிதைவடையும்போது ரத்தத்தில் பிலிரூபின் தேங்கியிருப்பதால் குழந்தையின் தோல், கண்கள் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கலாம்மஞ்சள் காமாலை தென்படுவதற்கும் குழந்தைக்கு பாலூட்டுவதற்கும் எந்த தடையும் இல்லை. அதனால் தொடர்ந்து பாலூட்டலாம்.

பொதுவாக இந்த மஞ்சள் காமாலை தானாகவே சில நாட்களில் குணமடையக்கூடியது என்றாலும் பரிசோதனை செய்து மஞ்சள் காமாலையின் நிலையை அறிந்துகொள்ள வேண்டும்.மஞ்சள் காமாலையால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கவேண்டிய அவசியம் ஏற்படும்.

ஒருசில குழந்தைகளுக்கு மட்டும் ஒளிச்சிகிச்சையும் குளுக்கோஸ் ஏற்றவேண்டிய அவசியமும் ஏற்படலாம். குழந்தை பால் குடிப்பதற்கு மறுத்தால், அதிக சோம்பலுடன் காண்ப்பட்டால் மருத்துவர் உதவியை நாடவேண்டும்.