சந்திரபாபு நாயுடுவை வீட்டில் சிறை வைத்த ஜெகன் மோகன்! ஆந்திராவில் கொந்தளிப்பு!

ஒரு காலத்தில் மோடியின் தீவிர ஆதரவாளராகவும், பின்னர் எதிர்ப்பாளராகவும் மாறியவர் சந்திரபாபு நாயுடு. ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஆனதில் இருந்தே சந்திரபாபு நாயுடுக்கு கடும் நெருக்கடி கொடுத்துவருகிறார் ஜெகன்மோகன்.


இந்த நிலையில், குண்டூரில் தெலுங்குதேசம் கட்சியினரை ஜெகன்மோகன் கட்சியினர் அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். அதனால், ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாக கூறி, அந்த கட்சிக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி இன்று குண்டூர் மாவட்டத்தில் பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்தது. 

.இந்த போராட்ட அறிவிப்பால் குண்டூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலுங்குதேசம் கட்சியின் பல்வேறு தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நரலோகேஷ் ஆகியோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நரசராவ்பேட்டா, சட்டேனாபள்ளி, குரஜாலா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் கேள்விப்பட்டு சந்திரபாபு நாயுடு வீட்டுக்கு ஊர்வலமாக செல்லமுயன்ற தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களையும் கைது செய்தது போலீஸ். நிலவரம் இன்னமும் ஆந்திராவில் கலவரமாகவே இருக்கிறது.