வயிற்றில் வளரும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்க்கும்போது தாய்க்கு ஆனந்தமாகத்தான் இருக்கும். அதேநேரம் அச்சமும் நெஞ்சின் ஓரத்தில் தோன்றவே செய்யும். இப்படி ஸ்கேன் செய்து பார்ப்பதால் குழந்தைக்கு ஏதேனும் சிக்கல் நேர்ந்துவிடுமோ என்று பயப்படுவார்கள்.
கர்ப்பமான பெண்கள் ஸ்கேன் செய்தால் ஆபத்து வருமா?

பொதுவாக இன்றைய நிலையில், ஸ்கேன் செய்து பார்ப்பதால் தாய்க்கு அல்லது குழந்தைக்கு எந்த பிரச்னையும் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். வயிற்றில்
வளரும் குழந்தைகளின்
வளர்ச்சி விகிதம், ஆரோக்கியம் போன்றவற்றை
அறிந்து கொள்வதற்கும்,
சிகிச்சைகள் மற்றும்
ஆலோசனைகளை வழங்குவதற்கும்,
குழந்தை பிறக்கும் நாளை முன்கூட்டியே
அறிந்து கொள்வதற்கும்
ஸ்கேன் செய்வது
மிகவும் முக்கியமானது.
இன்றைய மருத்துவ முறையில் எந்த
விதமான கதிர்வீச்சு
முறையும் இந்த
ஸ்கேனிங் முறையில்
பயன்படுத்துவதில்லை என்பதனால்
வயிற்றில் வளரும்
குழந்தைக்கு எவ்விதமான
பாதிப்புகளும் ஏற்படாது