மாயமான கணவன் யுவராஜ்! தேடி அலைந்த மனைவி ரேகா! ஒரே அறையில் தங்கியிருந்த கவிதாவால் ஏற்பட்ட ட்விஸ்ட்!

திருமணமான சில ஆண்டுகளில் மனைவியை தனிமையில் விட்டு வேலைக்காக வெளியூருக்கு சென்ற கணவன் வெகு நாட்களாகியும் திரும்பி வராத நிலையில் அவரது அலுவலகத்திற்கு சென்று பார்த்த மனைவிக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதை பார்த்து மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.


சென்னை தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை அலுவலகத்தில் பணியாளராக பணியாற்றி வருபவர் யுவராஜ் இவருக்கும் அவரது உறவினர் பெண்ணான ரேகா என்பவருக்கும் திருமணம் நடந்தது இந்நிலையில் அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வேலை காரணமாக சென்னையில் இருந்து ராமேஸ்வரம் மாற்றப்பட்டுள்ளார்.

ராமேஸ்வரத்தில் உள்ள தமிழக அரசு சுற்றுலாத்துறை விடுதியில் மேலாளராக பணி அமர்த்தப்பட்டார் .இதையடுத்து பணிக்காக ராமேஸ்வரம் சென்ற யுவராஜ் பல மாதங்கள் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் அதிர்ச்சி அடைந்த மனைவி அவரை காண ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார். அவர் பணியாற்றும் விடுதிக்குச் சென்று கேட்டபோது அவர் தனது மனைவியுடன் தமிழக அரசு சுற்றுலாத்துறை விடுதியில் உள்ள அறையில் தங்கி உள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர்.

இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ரேகா நான் தான் அவரது மனைவி என விடுதியில் உள்ளவர்களிடம் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் கொடுத்த விலாசத்தில் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது யுவராஜ் கவிதா என்ற பெண்ணுடன் அவள் தான் தனது மனைவியை எனக் கூறி அங்கு தங்கி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ரேகா காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார் இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது கவிதா என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரியவந்தது. சென்னையில் இருக்கும் போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது இதையடுத்து யுவராஜ் ராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டபோது கவிதாவும் யுவராஜ் உடன் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து இருவரும் கணவன் மனைவி என கூறி அரசு விடுதியில் தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். இந்நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை யுவராஜை பணியிடை நீக்கம் செய்துள்ளது.