புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு மாதவிலக்கு வரும் தெரியுமா?

பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தைகளுக்கு, பிறப்பு உறுப்பு வழியே சிறிதளவு ரத்தம் அல்லது ரத்தக்கசிவு இருப்பதுண்டு. இது இயல்பான ஒன்று என்பதால் இதைக் கண்டு தாய் அச்சப்பட தேவையில்லை.


குழந்தைக்கு நஞ்சுக்கொடி மூலம் சென்றடைந்த தாயின் ஹார்மோன்கள் அனைத்தும் வெளியே வந்ததும் நிறுத்தப்படுகிறது.இந்த ஹார்மோன்களின் அளவு ரத்தத்தில் படிப்படியாக குறையும்போது, குழந்தையின் கர்ப்பப்பையில் இருந்து சிறிதளவு ரத்தம் வெளியேறலாம்.

குழந்தையின் இனப்பெருக்க உறுப்புகள் சிறப்பாக இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகவே இந்த டினி மென்ஸ்ட்ரலை எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த ரத்தக்கசிவு காரணமாக குழந்தைக்கு வலி, வேதனை இருக்காது என்பதால் தாய் அச்சப்பட வேண்டியதில்லை.

அனைத்து பெண் குழந்தைகளுக்கும் இந்த ரத்தக்கசிவு கண்டிப்பாக வரும் என்று உறுதிபட சொல்ல முடியாது. அதனால் பெண் குழந்தைக்கு ரத்தக்கசிவு வரவில்லை என்றாலும் கவலைப்பட தேவையில்லை