குழந்தையின் பட்டுப் போன்ற தோலை பராமரிக்கத் தெரியுமா?

பிறந்த குழந்தையின் உடல் மிகவும் மென்மையாகவும் பட்டுப்போலும் இருக்கும் என்பதால் பலரும் தொட்டுப்பார்க்க ஆசைப்படுவார்கள். பிறரது கைகளில் இருக்கும் கிருமிகள் குழந்தையை தொற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு என்பதால் பிறந்த ஒரு வாரம் வரையிலாவது பிறர் கையில் கொடுக்கக்கூடாது.


சூரிய ஒளியை தாங்கும் சக்தி குழந்தைகளுக்கு இருப்பதில்லை என்பதால் சூரியக்கதிர்கள் நேரடியாக உடம்பில் படாமல் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்வெயில் அல்லது வெப்பம் காரணமாக கொப்பளங்கள் ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

குளிர் காலங்களில் குழந்தையை முடிந்த அளவுக்கு கதகதப்பாக வைத்திருப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்குளிர்காலத்தில் காற்றில் இருக்கும் கிருமிகள், பூஞ்சைகள் எளிதில் குழந்தையை தாக்கிவிடலாம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தோலில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால் மருத்துவரிடம் காட்டி, குழந்தையின் உடலுக்கு ஏற்ற லோஷன்களை தடவ வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் மருந்துக்கடையில் ஏதேனும் க்ரீம் வாங்கி தடவுவதும், சுய மருத்துவம் செய்வதும் கூடாது.