குழந்தையை பாதிப்பு இல்லாமல் பத்திரமாகத் தூக்குவது எப்படின்னு தெரியுமா?

பிறந்த குழந்தையை ஒரு கண்ணாடி பாத்திரம் போன்று பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். குழந்தையின் உறுப்புகள் முழு வளர்ச்சி அடைவதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால் வேகமாக தூக்குவது, குலுக்குவது போன்றவை குழந்தைக்கு ஆபத்தாக முடியலாம்.


பிறந்த சில மாதங்களுக்கு தலை வலிமையுடன் நிற்பதில்லை. அதனால் அசட்டையாக தூக்குவதால் குழந்தைக்கு வலி, சுளுக்கு போன்ற சிக்கல் ஏற்படலாம்அதனால் கைகளை நன்றாக அகட்டிக்கொண்டு தலை, கழுத்து, தோள்பட்டை போன்ற மூன்றும் இணைந்து இருக்குமாறு பிடிமானம் கொடுத்துதான் தூக்க வேண்டும்.

குழந்தையை கீழே வைக்கும்போதும் தலைப்பகுதியும் கழுத்துப்பகுதியும் இணைந்தே இருப்பதுபோன்று செயல்பட வேண்டும். விவரம் புரியாமல் ஒருசில சிறுவர்கள் குழந்தையை எடுத்து விளையாட ஆசைபப்டுவார்கள். ஒரு மாதம் கழித்து பாப்பாவை வைத்து விளையாடலாம் என்று சொல்லி தவிர்த்துவிட வேண்டும்.

குழந்தைக்கு கழுத்துப் பகுதியில் ஏதேனும் வலி இருப்பதுபோல் தெரியவந்தால் சுய மருத்துவம்  செய்யக்கூடாது. குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுவது, ஊஞ்சலாடுவது, தூக்கிப்போட்டு பிடிப்பது போன்ற செயல்களிடலும் ஈடுபடக் கூடாது.