கோவை சிறுமி கொடூர பாலியல் வல்லுறவு! கொலை! குற்றவாளியை கைது செய்தது போலீஸ்!

கோவை சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவையில் கடந்த வாரம் 6 வயது சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சுமார் ஒரு வாரமாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த சந்தோஷ் என்வன் கைது செய்யப்பட்டுள்ளான்.

34 வயதான இந்த சந்தோஷ் சிறுமியை இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அப்போது சிறுமி அலறியதால் கொடூரமாக கழுத்தை நெறித்து கொலை செய்ததாக திடுக் வாக்குமூலம்அளித்துள்ளான் சந்தோஷ்.

சந்தோஷை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பாலியல் பலாத்காரத்தின் போது சிறுமி அலறியதால் அதனை தடுக்கும் வகையில் கொலை செய்ததாக சந்தோஷ் ஒப்புக் கொண்டதாக போலீசார் கூறியுள்ளனர்.