பச்சிளம் நாய் குட்டிகளுக்கு பாலியல் தொந்தரவு! சென்னையை சுற்றி வரும் சைக்கோ இளைஞன்!

சென்னையில் பச்சிளம் நாய்க்குட்டிகளை பயன்படுத்தி உடலுறவு மேற்கொண்டு வரும் சைக்கோ இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர்.


சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான ஒரு நபரின் நடமாட்டம் இருந்துள்ளது. அப்பகுதியில் சுற்றிவரும் நாய்க்குட்டிகள் அருகாமையில் செல்வதும் தன்னுடைய உடைகளை களைந்து மாக அந்த நபர் இருந்துள்ளான்.

அவனுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ஒரு நபர் தனது வீட்டில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார். அப்போது அவர் பார்த்த காட்சி மிகவும் கொடூரமாக அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் இருந்தது.

டிப்டாப் உடையுடன் இருக்கும் அந்த இளைஞன் திடீரென தனது உடைகளைக் களைந்து நாய்க்குட்டிகளை தவறான முறையில் பயன்படுத்தி உடலுறவு செய்யும் காட்சி அதில் பதிவாகி இருந்தது. உடனடியாக விலங்குகள் நல அமைப்பான ப்ளூ கிராஸ்க்கு அந்த நபர் தகவல் அளித்தார்.

விரைந்து வந்த ப்ளூ கிராஸ் அமைப்பினர் அந்த சிசிடிவி காட்சிகளை பெற்றுக்கொண்டு மாதவரம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். நாய்க்குட்டிகளை வைத்து உடலுறவு செய்யும் நபர் நிச்சயமாக சைக்கோவாக தான் இருக்க முடியும் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை நந்தனத்தில் இதேபோன்று இளைஞன் ஒருவன் நாயை உடலுறவு செய்யும் பொழுது சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கினான். தற்போது மாதவரம் பகுதியில் சைக்கோ இளைஞன் ஒருவன் இப்படி செய்துள்ளது சென்னைவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.