வாட்ஸ்ஆப்பில் வந்த புதுமனைவியின் அந்த புகைப்படங்கள்..! மணமேடையில் தலை சுற்றி விழுந்த மாப்பிள்ளை! அதிர்ச்சி காரணம்!

சென்னையில் காதலனுடன் சேர்ந்து இளம்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வாழ்க்கையில் சில சமங்களில் சினிமாவை விட நிஜ கதைகள் மிகவும் சுவாரசியாமாக நிகழ்கிறது. அந்த வகையில் சென்னை போரூர், எம்.ஜி.ஆர். நகர் அடுத்த நெசப்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அயனாவரத்தை சேர்ந்த பையனுக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.  

இந்த நிலையில், கடந்த 10-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது. முன்னதாக 9-ந் தேதி மாலை இருவருக்கும் அயனாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு விழா நடைபெற்று கொண்டிருந்தது.

விழா நடைபெற்று கொண்டு இருக்கும் வேளையில், மணமகனின் செல்போன்னுக்கு குறுஞ்செய்திகள் ”வாட்ஸ்அப்” மூலம் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது. பின்னர் என்னவென்று பார்த்த மணமகனுக்கு அதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது.

அந்த அதிர்ச்சி என்னவென்றால், தனக்கு மனைவியாக போகும் மணப்பெண் வேறு ஒரு வாலிபருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோகளை பார்த்ததும் அப்படியே தலைசுற்றி கீழே சாய்ந்துள்ளார். இந்தநிலையில், அடுத்து உடனடியாக வரவேற்பு விழா மற்றும் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இந்த சம்பவம் திருமண மண்டபத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து, மறுநாள் காலை உறவுக்காரப் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் அந்த மனம் உடைந்த மணமகன். இதற்கு அடுத்து மணமகனுக்கு புகைப்படங்களை அனுப்பி மகளின் திருமணத்தை நிறுத்திய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம்பெண்ணின் பெற்றோர் எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

பெண் வீட்டினரின், புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் தான் தெரிய வந்துள்ளது, அந்த வாலிபனும் இளம்பெண்ணும் காதலித்து வந்தத செய்தி.

 பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்தால் உடனடியாக வேறு ஒருவருடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததும் தெரிய வந்தது. இந்த காரணத்தினால் தான் இருவரும் ஒன்று சேர்ந்து திருமணத்தை நிறுத்த திட்டமிட்டனர்.

விசாரணையில் இளம்பெண், மணமகனின் செல்போன் எண்ணை காதலனிடம் கொடுத்து இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை அனுப்ப சொன்னதும் தெரியவந்தது.

தகவல் அறிந்த காவல் துறையினர், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இளம்பெண்ணின் பெற்றோர் தனது மகளை காதலனுடன் சேர்த்து வைக்க சம்மதம் தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து இருவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.