50 வயது நடிகருடன் காதல், ரொமான்ஸ், எல்லாமே! தீரன் நடிகை கொடுத்த அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

நடிகை ராகுல் பிரித் சிங் டெல்லியை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 28 வயதாகிறது. தமிழில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடித்து வந்தாலும் சமீபத்தில் வெளிவந்த கார்த்திக் நடித்த தீரன் படத்தின் மூலம் பிரபலமானார்,


தமிழ், தெலுங்கு ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரதானமாக நடித்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயனின் 14-வது படத்திலும் செல்வராகவனின் படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும், சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த NGK திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாலிவுட்டில் 'De De Piyar De '  என்ற  படத்தில் கதாநாயகியாக என்ற படத்தில் நடித்துள்ளார் ரகுல்.

 இந்த படத்தில் நடிகர் அஜய் தேவுகன் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் 24 வயதாகும் ரகுல் 50 வயது உள்ள ஒருவரை காதலிக்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்த படம் காமெடியாக விவரிக்கிறது. இதனைக் கேட்ட ரசிகர்கள் இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று அதிர்ச்சியாக உள்ளனர்.

இந்த படம் வரும் மே மாதம் 17-ம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தின் டிரைலர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.