ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள எலவேட்டரில் காதல் ஜோடி ஒன்று சில்மிஷத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வைரலாக பரவி வருகிறது.
ரயில் நிலையத்தில் காமலீலை! காதல் ஜோடியின் சிசிடிவி காட்சி வைரல்!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_1387_1_medium_thumb.jpg)
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அண்மையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக எலவேட்டர் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. சம்பவத்தன்று சிசிடிவி காட்சிகளை பார்த்த மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் சிறுது நேரம் உறைந்து போயினர்.
காரணம், ஆள் யாரும் இல்லாத அந்த எலவேட்டர் இல் காதல் ஜோடி ஒன்று, பயங்கர சேட்டை செய்துள்ளது. காதலி தனியாக சிக்கிவிட்டால் என காதலனும், காதலன் தனியாக சிக்கிவிட்டான் என்ற ஆசையில் காதலியும் மாறி மாறி தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.
இந்த சமயத்தில் மூன்றாம் நபர் ஒருவர் குறிக்கிடவே அந்த காதல் ஜோடி அமைதியாக அங்கிருந்து சென்று விட்டது. இது போன்ற மூன்று சிசிடிவி காட்சிகள் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகின்றன.
இது அந்த காதல் ஜோடியை மட்டுமல்லாமல் நிர்வாகத்தையும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டதன் மூலம் ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாகம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் இந்த காட்சிகளை வெளியிட்டார்களா?
அல்லது வெளி நபர்கள் யாரேனும் அனுமதி பெற்று உள்ளே சென்று காட்சிகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.