நான் நல்ல பெண் இல்லை! தந்தையை துண்டு துண்டாக வெட்டி கொல்வதற்கு முன் மகள் எழுதிய பகீர் கடிதம்! அதிர்ச்சி காரணம்!

காதலனின் அறிவுரைப்படி இளம்பெண் தந்தையை கொடூரமான முறையில் கொலை செய்திருப்பது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மும்பை மாநகரில் மாஹிம் என்ற கடற்கரை அமைந்துள்ளது. 4-ஆம் தேதி மாலை நேரத்தில் கடற்கரையில் மர்மமான முறையில் ஒரு பெட்டி கிடந்துள்ளது. அருகே சென்று பார்த்தபோது ஏதோ ஒரு உடல்பாகம் வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதை போன்று காட்சியளித்துள்ளது.

உடனடியாக பொதுமக்கள் அப்பகுதி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெட்டியை பரிசோதனை செய்தனர். அந்தப் பெட்டியில் மனித உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு திறமையைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடற் பாகங்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடனடியாக அவர்கள் தங்களுடைய விசாரணையை மேற்கொண்டனர். நபரின் அடையாளம் தெரியாமல் காவல்துறையினர் விசாரணையை மேற்கொள்ள தொடங்கினர். அந்த பெட்டிக்குள் ஒரு ஸ்வெட்டர் கிடந்துள்ளது. 

ஸ்வெட்டரை அடிப்படையாக கொண்டு தேடியபோது காவல்துறையினருக்கு பென்ட் ரிபெல்லோ என்ற 59 வயது கிட்டார் கலைஞரின் புகைப்படங்கள் கிடைத்துள்ளன. ஃபேஸ்புக்கில் அவர் இதேபோன்று ஸ்வெட்டர் அணிந்து வந்ததை கண்டு காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்றனர். 

அவருடைய வளர்ப்பு மகளான ஆர்த்யாவிடம் காவல்துறையினர் விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. ஆராத்யாவுக்கும், அவருடைய வீட்டிற்கு அருகேயுள்ள ஒரு இளைஞருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை ரிபெல்லோ வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் அவ்வப்போது ஆராத்யாவுக்கு பாலியல் தொந்தரவுகளும் செய்துள்ளார் என்றும் ஆராத்யா கூறியுள்ளார். 

உடனடியாக ஆராத்யா தன்னுடைய காதலனின் உதவியுடன் வளர்ப்பு தந்தையை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். உடற்பாகங்களை வெட்டி 3 பெட்டிகளில் அடைத்து மாஹிம் கடற்கரையில் வீசியுள்ளனர். பிணத்தின் கால்களை வீட்டின் அடுப்பிலேயே எரித்துள்ளனர்.

காவல்துறையினர் ஆராத்யாவின் வீட்டில் பரிசோதனை செய்தபோது அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தையும் கண்டுபிடித்தனர். அதில், "நான் மிகவும் கெட்ட மகள். அப்பா என்னை மன்னித்து விடுங்கள். கடவுளே என்னை மன்னித்துவிடுங்கள்" என்று எழுதி வைத்திருந்தார். காவல்துறையினர் காதலனின் யோசனை நாளிலேயே இளம்பெண் தந்தையை கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது மாஹிம் கடற்கரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.