வீட்டுக்கே வரவழைத்து பல இளைஞர்களுடன் உல்லாசம்! பழனியை கலக்கும் மாற்றுத் திறனாளி மாலதியின் விபச்சாரம்! முகம் சுழிக்கும் குடும்பங்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் பெண் ஒருவர் வாலிபர்களை வீட்டுக்கு வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.


பழனி அடிவாரத்தில் உள்ள பாட்டாளி தெருவை சேர்ந்தவர் மாலதி. மாற்றுத்திறனாளியான இவர் வீட்டுக்கு வாலிபர்களை வரவழைத்து உல்லாசத்தில் ஈடுபடுவதாக அப்பகுதியில் உள்ள மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் அவர் குடியிருக்கும் வீட்டை காலி செய்ய வேண்டும் என வீட்டு உரிமையாளர் இடமும் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். 

இதனால் வீட்டின் உரிமையாளர் மாலதியிடம் அட்வான்சை திருப்பிக் கொடுத்து வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மாலதி வீட்டு உரிமையாளரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் பெரிதாகி வீட்டு உரிமையாளரை மாலதி தாக்கினார். இதனால் வீட்டு உரிமையாளர் போலீசில் மாலதி பற்றி புகார் அளிக்க சென்றுள்ளார்.

இதை அறிந்த மாலதி வீட்டு உரிமையாளர் தன்னை தாக்கியதாக கூறி கொண்டு பழனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார்.அதோடு மட்டுமில்லாமல் தான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் தனக்கு ஆதரவாக உள்ளவர்களை திரட்டி போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளாராம். இதனால் நிலைமையை உணர்ந்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து மாலதி மீது புகார் அளித்துள்ளனர்.

பொதுமக்கள் அளித்த புகாரில் , மாலதி என்பவர் தனது வீட்டுக்கே வாலிபர்களை வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதனால் அப்பகுதியில் உள்ள மாணவிகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.