என்னால் முடியவில்லை! கடிதம் எழுதிவிட்டு ஆற்றில் குதித்த CAFE COFEE DAY ஓனர்! 40 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்தவர்!

கேஃப் காஃபி டே நிறுவனரான வி.ஜி.சித்தார்த் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாக சென்றுள்ள சம்பவமானது அந்நிறுவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேஃப் காஃபி டேயின் நிறுவனர்  வி.ஜி.சித்தார்த். இந்த நிறுவனம்தான் சென்னையில் இயங்கிவரும் காஃபி நிறுவனங்களில் பெரிதாகும். இவர் முன்னாள் கர்நாடக முதலமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனாவார். அவருக்கு ஒரு மனைவியும், 2 மகன்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர் திடீரென்று ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு மாயமாகியுள்ளார். தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் "37 ஆண்டுகளாக சிரமப்பட்டு கிட்டத்தட்ட 30,000 பணிகளில் உருவாக்கினேன்.

கணிப்பொறி நிறுவனத்திலும் கிட்டத்தட்ட 20,000 பணிகளை உருவாக்கிய நான் இன்று தோற்றுப்போய் விட்டேன். என்னுடைய முயற்சிகள் சரியாக இருப்பினும் நினைத்த அளவிற்கு என்னால் தொழிலில் லாபத்தை ஈட்ட இயலவில்லை. என் மீது நம்பிக்கை வைத்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இதற்குமேல் என்னால் கஷ்டத்தை அனுபவிக்க இயலவில்லை. நான்கு புறங்களிலிருந்தும் கஷ்டத்தால் சூழ்ந்த நான் இன்று போராடுவதை நிறுத்திவிட்டேன். என்னை வருமானவரித் துறையை சேர்ந்த சிலர் என்னை மனதளவில் மிகவும் துன்புறுத்தினர். நான் செய்த ஒவ்வொரு வியாபாரத்திற்கும் நான் மட்டுமே பொறுப்பாளர்.

என்னுடைய ஆடிட்டர்களும், ஊழியர்களும், குடும்பத்தினரும் அதில் சம்பந்தப்பட மாட்டார்கள். அனைத்திற்கும் நான் மட்டுமே பொறுப்பு. என்னுடைய சொத்துக்களின் விவரங்களை குறிப்பிட்டு உள்ளேன். அதிலிருந்து அனைவருக்கும் பணத்தை திருப்பி செலுத்துங்கள். ஒவ்வொரு ஊழியரும் மிகவும் கடுமையாக போராட வேண்டிய காலம் இது. நான் யாரையும் ஏமாற்றும் விதத்தில் எந்த பணியையும் செய்யவில்லை" என்று மனமுருக எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தை பெற்ற காவல்துறையினர் சித்தார்த்தாவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது இந்தியாவின் தொழில் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.