கணவரின் ஆணுறுப்பை துண்டித்த மனைவி அதை நாய்க்கு இரையாக அளித்துள்ள சம்பவமானது உக்ரைன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி உடல் முழுவதும் ரத்தம்! கணவன் உடலில் தலை இல்லை! நடு வீட்டில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!
உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருடைய வயது 49. இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் மரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த நாள் முதலே மரியாவை அலெக்சாண்டர் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
பல வருடங்களாக மரியாவை அலெக்சாண்டர் கடுமையாக கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் மரியா மிகுந்த மனஉளைச்சலுடன் காணப்பட்டார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார். இருப்பினும் அலெக்சாண்டர் மரியாவை கொடுமைப்படுத்துவதை நிறுத்தவில்லை.
கடந்த சில நாட்களாகவே தான் சந்தித்து வந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மரியா துடித்துக்கொண்டிருந்தார். அதன்படி சென்ற மாதம் 23-ஆம் தேதியன்று, அலெக்சாண்டர் உறங்கி கொண்டிருந்தபோது மரியா அவருடைய கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
கோடாரியால் அவருடைய கழுத்தை வெட்டியுள்ளார். மேலும் மர்மஉறுப்பை அறுத்து அதனை நாய்க்கு இறையாக்கினார். உடலை துண்டு துண்டாக வெட்ட, முயற்சி செய்த மரியா அதில் தோல்வி அடைந்தார். வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தபோது அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் தடுத்து நிறுத்தியுள்ளார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அலெக்சாண்டர் தலையின்றி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இருவரும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அலெக்சாண்டரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தன் கணவரை கொலை செய்ததை மரியா ஒப்புக்கொண்டதால், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது உக்ரைன் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.