கோமுகி நதியில் தண்ணீர் திறப்பு.! விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி.!

இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது. அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி நதி அணையிலிருந்து 2020-2021-ஆம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன


விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், giHa பாசன நிலங்கள் 5,860 ஏக்கரும், புதிய பாஅன நிலங்கள் 5,000 ஏக்கரும், ஆக மொத்தம் 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு கோமுகி நதி அணையிலிருந்து 1.10.2020 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.