இந்திய பவுலர்களை தெறிக்கவிட்ட மேற்கிந்தியத்தீவுகள் பேட்ஸ்மேன்கள்!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை குவித்துள்ளது.


டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லிவிஷ் 17 பந்துகளில் 40 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஹெட்மையர் மற்றும் பொலார்ட் அதிரடியாக ஆடி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரன்களை மளமளவென உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ஹெட்மையர் 56 கண்களுக்கும் பொலார்ட் 37 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.

இந்திய அணியின் சார்பில் சுழற்பந்துவீச்சாளர் சஹால் 2 விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.