நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழக அரசை அவதூறாக விமர்சனம் செய்த குற்றத்திற்காக அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது.
தமிழக அரசை விமர்சனம் செய்த சீமான் மீது பாய்ந்தது அவதூறு வழக்கு..!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_15572_1_medium_thumb.jpg)
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற பொதுக் கூட்டங்களிலும் கட்சி கூட்டங்களிலும் தமிழக அரசைப் பற்றி அவதூறாக பேசி விமர்சனம் செய்து வருகிறார்.
இவரின் தாறுமாறான விமர்சனம் கேட்போருக்கு பெரும் ஆத்திரத்தையும் கோபத்தையும் உருவாக்கித் தருகிறது. அதுமட்டுமல்லாமல் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழக அரசை பற்றியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை பற்றியும் விமர்சிப்பதையே தன்னுடைய கொள்கையாகக் கொண்டு உள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்ற சீமான் தமிழக அரசை பற்றியும் அமைச்சர்களை பற்றியும் கேலியாகவும் அவதூறாகவும் கூறி விமர்சித்தார்.
இதனால் தமிழக அரசு சார்பில் சீமான் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கானது விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.