ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த துணை நடிகை கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டூ மதுரை! விமானத்தில் பறக்கும் விபச்சார அழகிகள்! தொழில் அதிபர்களுக்கு விருந்தாகும் நடிகைகள்! பரபர ரிப்போர்ட்!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_15155_1_medium_thumb.jpg)
மதுரை மாவட்டத்தில் ஆன்லைன் விபச்சாரம் பெருகி வருகிறது. இதுதொடர்பான தகவலொன்று ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமா என்பவருக்கு தகவல் கிடைத்துள்ளது. லோகேன்டா சமூக வலைத்தளத்தில் ரவி என்பவரது தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணுக்கு காவல்துறை அதிகாரியான பழனி என்பவர் வாடிக்கையாளர் போன்று கால் செய்துள்ளார். அப்போது ரவி, "எங்களிடம் இருந்த பெண்களுடன் உறவில் இருப்பதற்கு 1500 ரூபாய் பணம் தரவேண்டும்" என்று கூறியுள்ளார்.
பின்னர் ரவி 3 இடங்களுக்கு மாற்றி மாற்றி பழனியை வர கூறியுள்ளார். இறுதியாக கோச்சடை முத்தையா தேவர் தெருவில் இறுதியாக வர கூறியுள்ளார். 3 பெண்களை காண்பித்து "இவர்களுள் யாருடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தேர்வு செய்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார். விபச்சாரம் நடப்பதை உறுதி செய்துகொண்ட பழனி சக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக காவல்துறையினர் அங்கிருந்த அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஜோதிலட்சுமி என்பவராவார். இவர் நாடோடி,தேவராட்டம்,சீமராஜா ஆகிய திரைப்படங்களில் துணை நடிகையாக பணியாற்றி வந்துள்ளார்.
அதன்பின்னர் மதுரைக்கு வந்தவர் விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ளார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.