பந்துவீச்சில் மாஸ் காட்டிய இந்திய அணி! கதிகலங்கிய இலங்கை பேட்ஸ்மேன்கள்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை எடுத்துள்ளது.


டாஸ் வென்ற இந்திய அணி இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் குஷால் பெரேரா அதிகபட்சமாக 34 ரன்களை எடுத்தார். தொடக்க ஆட்டக்காரரான அவிஷ்கா பெர்ணான்டோ 22 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணியின் பேட்ஸ்மேன்களும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 

இதனால் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் தாக்கூர் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை கைப்பற்றினார். நவதீப் சைனி சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தார். குல்தீப் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி சேஸ் செய்து வருகிறது.