நான் வந்துட்டேன்னு சொல்லு..! விஷம் குடித்த டிவி நடிகை தற்போது வெளியிட்ட முக்கிய தகவல்!

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தற்கொலைக்கு முயன்ற நடிகை சமூக வலைத்தளங்களில் வைரல் பதிவை போஸ்ட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது பிரபல சீரியல்களில் வில்லியாக வலம் வரும் நடிகைகளில் முதன்மையானவர் மகாலட்சுமி. கடந்த 8 வருடங்களாக பல்வேறு சீரியல்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். "அரசி" என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து  வைத்தார். "தாமரை", "வாணி ராணி", "தேவதை கண்டேன்" ஆகிய சீரியல்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார்.

இந்நிலையில் 2016-ஆம் ஆண்டில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவருடைய கணவரின் பெயர் அணில்குமார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த திருமணமானது காதல் திருமணம். தற்போது சின்னத்திரையில் பரபரப்பான புகார் ஒன்று உலா வருகிறது. 

அதாவது மகாலட்சுமிக்கும் தேவதையை கண்டேன் சீரியலின் ஹீரோவான ஈஸ்வருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக, அவரின் மனைவியான சீரியல் நடிகை ஜெயஸ்ரீ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். "எங்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தேவதையை கண்டேன் சீரியல் நடிக்கத் தொடங்கியபோது என் கணவருக்கும், நடிகை மகாலட்சுமிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் செல்போன்களில் மிகவும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவது வாடிக்கையாக கொண்டிருந்தனர். மேலும் மகாலட்சுமியின் மகனே தன்னை அப்பா என்று அழைக்குமாறு ஈஸ்வர் கூறியது, எங்கள் மகளை பெரிதும் பாதித்தது. இதனிடையே விவாகரத்து கேட்டு என்னை மோசமான முறையில் கொடுமைப்படுத்தினார்‌.

என் வயிற்றிலே அவர் எட்டி உதைத்தது இன்றளவிலும் வலியை தருகிறது. இதுமட்டுமின்றி எங்களுக்கு திருமணம் ஆன பிறகுதான் அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததை அறிந்துகொண்டேன். அவர் லட்சக்கணக்கான பணத்தை சூதாட்டத்தில் இழந்து கடனாளியாக இருந்தனர். அப்போது நான் தான் அந்த பணத்தை திருப்பிக்கொடுத்தேன். தினமும் என்னிடம் வந்து மகாலட்சுமியுடன் வாழ விரும்புவதாக கூறி விவாகரத்து கேட்டு கொடுமைப்படுத்துகிறார்" என்று புகார் அளித்திருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், நடிகர் ஈஸ்வரை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் நடிகை மகாலட்சுமியை தொடர்புகொள்ள முயற்சி செய்து வருவதாகவும், இருப்பினும் அவர் தலைமறைவாகி விட்டு யாருடனும் தொடர்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈஸ்வர் ஜாமீனில் வெளியே வந்தவுடன் தன்னுடைய மனைவியான ஜெயஸ்ரீ குறித்து பல புகார்களை அடுக்கி வைத்தார். ஒரு பெண் காவல்துறை அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு ஜெயஸ்ரீயை ஊடகங்களிடம் பேசக்கூடாது என்று கூறி மிரட்டியுள்ளார். மேலும் மீண்டும் தேவதையை கண்டேன் சீரியலில் நடிக்க தொடங்கியவுடன் ஈஸ்வர் மகாலட்சுமியிடம் மிகவும் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

இவற்றை தாங்கிக்கொள்ள இயலாத ஜெயஸ்ரீ தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.  தக்க நேரத்தில் ஜெயஸ்ரீயின் நண்பர்கள் அவரை மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் ஜெயஸ்ரீ சிகிச்சை பெற்று வந்தார் என்று கூறப்பட்டது.

இந்த சம்பவமானது சின்னத்திரை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சில நாட்களிலேயே தான் செய்தது முட்டாள்தனம் என்று புரிந்துகொண்ட ஜெயஸ்ரீ குணமடைய தொடங்கினார். அவர் குணமடைவதை அவருடைய நண்பர்கள் வட்டாரத்தினர் மகிழ்ச்சியாக கண்டுகளித்தனர். 

நேற்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் "ஐ அம் பேக்" என்று ஆங்கிலத்தில் பதிவு செய்திருந்தார். இந்தப் பதிவை கண்ட பலரும் ஜெயஸ்ரீக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். மேலும் மீண்டும் நடிக்க தொடங்குவாரா அல்லது நடனப்பள்ளியின் மீது கவனம் செலுத்துவாரா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.