ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணியை வென்றுள்ளது.
சதமடித்து மாஸ் காட்டிய முரளி விஜய்! தூத்துக்குடி அணியை கதற வைத்து வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_8787_1_medium_thumb.jpg)
டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை குவித்தது .அந்த அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் அபாரமாக விளையாடிய 57 பந்துகளில் 101 ரன்கள் குவித்து சதமடித்தார் .தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணியின் அதிசய ராஜ் டேவிட்சன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார் .
பின்னர் களமிறங்கிய தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது . அந்த அணியின் அக்ஷய் சீனிவாசன் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார் . இதனால் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
சதம் அடித்த முரளி விஜய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் .