நோஞ்சான் குழந்தைக்கு பலம் தரும் புளிச்ச கீரை !!

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பயிரிடப்படும் புளிச்ச கீரைக்கு தனியே மணமும் குணமும் உண்டு. இதனை ஆந்திராவில் கோங்குரா என்று அழைக்கிறார்கள். புளிப்புத்தன்மை கொண்டது என்றாலும் ஏராளமான சத்துக்கள் உடைய கீரை ஆகும்.


புளிச்ச கீரையின் இலை, மலர், விதை என அத்தனையுமே மருத்துவப் பயன்பாடு கொண்டதாகும். உடலை வலுவாக்கும் வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து புளிச்ச கீரையில் நிரம்பிக் காணப்படுகிறது.

• உடலில் சத்துப்பிடிக்காமல் நோஞ்சானாக காணப்படும் குழந்தைக்கு தொடர்ந்து புளிச்ச கீரை கொடுத்துவந்தால் உடல் நலமும் பலமும் அடையும்.

• தோல் நோய் உள்ளவர்கள் புளிச்ச கீரையை எடுத்துக்கொண்டால் சிரங்கு போன்ற அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

• ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையும் உடல் உஷ்ணத்தை சீராக பாதுகாக்கும் தன்மையும் புளிச்ச கீரைக்கு உண்டு.

• புளிச்ச கீரையை தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு வயிற்றுப்புண், குடல் புண் போன்ற சிக்கல்கள் ஏற்படுவதில்லை.

பொதுவாகவே கீரையை இரவில் சாப்பிடக்கூடாது என்பார்கள்.  அதனால் பகலில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.