4 முறை கலைந்த கரு..! 5வது முறையும் கர்ப்பமான பெண்மணி! திடீரென கிணற்றில் மிதந்த சடலம்! அதிர்ச்சியில் உறைந்த உறவுகள்!

9 மாத கர்ப்பிணி பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாயக்கன்புதூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு திருப்பதி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சங்கீதா. இத்தம்பதியினருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு மோகன்குமார் என்ற 5 வயது மகன் உள்ளான். அதன்பிறகு சங்கீதா 4 முறை கருவுற்றார். ஆனால் அனைத்து முறையிலும் குழந்தை இறந்தே பிறந்தது. இதனிடையே சென்ற ஆண்டு இவர் மீண்டும் கருவுற்றார்.

9 மாத நிறை கர்ப்பிணியாக இருந்த சங்கீதா நேற்று அப்பகுதியில் இருந்த கிணற்றில் விழுந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சங்கீதாவின் உடலை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தனர்.

அப்போது அவர் இறந்து கிடந்தது அவருடைய உறவினர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. உடனடியாக காவல்துறையினர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் வயிற்றில் இருந்த 9 மாத குழந்தையும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. 

சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.