ராஜஸ்தானை தெறிக்கவிட்ட அஸ்வின் ! KXIP 4ம் இடத்திற்கு முன்னேற்றம்!

கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். இவர் அதிரடியாக விளையாடி 30 ரன்களை எடுத்தார்.மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடி 52 ரன்களை எடுத்தார்.அதிரடியாக ஆடிய டேவிட் மில்லர் 40 ரன்களை சேர்த்தார்.

இதனால் கிங்ஸ் XI பஞ்சாப் அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பட்லர் 23 ரன்களையும், த்ரிபாதி 50 ரங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 27 ரன்களையும் , ரஹானே 26 ரன்களையும் எடுத்து அவுட் ஆனார்கள். மிடில் ஓவர்களில் ராஜஸ்தான் அணியினர் ரன்களை குவிக்க தவறினர்.

கடைசியில் களமிறங்கிய ஸ்டுவர்ட் பின்னி 11 பந்துகளில் 33 ரன்களை அடித்து வெற்றிக்காக போராடினார். எனினும் ராஜஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 170 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கிங்ஸ் XI பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்திய கேப்டன் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.