சர்க்கரை நோயாளிகளுக்கு இனி இன்சுலின் ஊசி தேவையில்லை! அமெரிக்காவின் அசத்தல் கண்டுபிடிப்பு!

ஊசியாக போடப்பட்டு வந்தன இன்சுலின் மருந்து மாத்திரையாக வடிவமைத்துள்ளார் அமெரிக்க விஞ்ஞானிகள் பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.


அமெரிக்கா நாட்டில் மாசச்சூயெட்ஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. அங்கு பிரபல தொழில்நுட்ப கல்வி ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு பயின்று வரும் கல்வி ஆய்வாளர்கள் அரியதொரு கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளனர்.

இதுநாள் வரையிலும் ஊசியில் செலுத்தப்பட்டு வந்த இன்சுலின் மருந்தானது, இனி மாத்திரை வடிவிலும் செலுத்தப்படலாம் என்ற ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். தொடக்க காலத்தில் இந்த முறையானது சற்று குறைகளை சந்தித்திருந்தன. ஆனால் ஆய்வாளர்கள் அந்த குறைகளை தற்போது நீக்கியுள்ளனர்.

30 மில்லிமீட்டர் உயரம் கொண்ட இந்த மாத்திரை இறங்கியவுடன் நேராக சிறுகுடலில் சென்று கலக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வயிற்றுப்பகுதியில் அமிலங்கள் அதிகமாக இருப்பதால் அங்கு கரையாமல் இருப்பதற்காக சிறந்த பூச்சுகள் மாத்திரையின் மீது பயன்படுத்தப்பட்டுள்ளன.

சிறுகுடலில் பிறரை அதிகமாக இருக்கும்போது இந்த மாத்திரை அங்கு சென்று வெடிக்கும். வெடித்த பின்னர் 1 மில்லி மீட்டர் உயரமுள்ள சொத்துக்கள் சிறுகுடலுக்கு செல்லும். அங்கு மாத்திரை வெடித்து ரத்த ஓட்டத்தில் கலந்து விடும்.

மாத்திரையில் வந்த பிற பாகங்கள் தாமாகவே கரைந்துவிடும். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியான "நேச்சுரல் மெடிசன்" என்ற இதழில் வெளியாகியுள்ளது. 

ஆய்வாளர்கள் எந்த கண்டுபிடிப்பானது சர்வதேச அரங்கில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.