என்னைவிட என் மனைவிக்கு 9 வயசு கம்மி..! அதுனால தான்..! 44 வயது பெயின்டரால் 35 வயது மனைவிக்கு நேர்ந்த விபரீதம்! காரணம் அது தான்..!

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக கொலை செய்ய முயன்ற கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தேனி மாவட்டம் போடி என்ற பகுதிக்கு அருகே உள்ள முத்தையா காலனியை சேர்ந்தவர் லட்சுமணன். 44 வயதாகும் இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் சாந்தி. இவருக்கு வயது 35. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் மனைவி சாந்தியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது கணவர் லக்ஷ்மணன் கடந்த சில நாட்களாகவே மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். 


இந்நிலையில் நேற்றும் கணவருக்கும் மனைவிக்குமிடையே இந்த பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதமாக மாறிய இந்த தகராறு காரணமாக கோபமடைந்த கணவன் லக்ஷ்மணன் தனது மனைவியின் கழுத்தை சேலையால் இழுத்து நெருக்கினான். இதனால் அவரது மனைவி சாந்தி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனால் தனது மனைவி இறந்துவிட்டதாக நினைத்து என்ன செய்வது என்று அறியாமல் அருகே இருந்த போடி டவுன் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்துள்ளார். 


இதனால் போலீசார் லக்ஷ்மணனை கைது செய்து பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது லட்சுமணனின் மனைவி சாந்தி உயிருக்கு போராடிய
நிலையில் இருந்துள்ளார். இதனை அறிந்த போலீசார் உடனடியாக சாந்தியை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சாந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.